பிக்பாஸ் மீரா மிதுனிடம் போலீசார் விசாரணை

பிக்பாஸ் மீரா மிதுனிடம் போலீசார் விசாரணை

பிக்பாஸ் மீரா மிதுனிடம் போலீசார் விசாரணை
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுனிடம் எழும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீரா மிதுன் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன் ‘மிஸ் தமிழ்நாடு 2019’ என்ற நிகழ்ச்சி நடத்தப்போவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.  இதனையடுத்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் ஈவிபி பிலிம் சிட்டியில், மீரா மிதுனிடம் எழும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com