பெரிய பாண்டியன் துணிவுக்கு தலை வணங்குகிறேன்: விஷால்

பெரிய பாண்டியன் துணிவுக்கு தலை வணங்குகிறேன்: விஷால்
பெரிய பாண்டியன் துணிவுக்கு தலை வணங்குகிறேன்: விஷால்

பெரிய பாண்டியன் துணிவுக்கு தலை வணங்குகிறேன் என்று நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொளத்தூரில் நகைக்கடை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தமிழக போலீசார் ராஜஸ்தான் சென்றிருந்தனர். அக்குழுவில் இடம்பெற்றிருந்த மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயம் அடைந்தார்.

இந்நிலையில், கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பெரியபாண்டி மகன்களின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் “ கொள்ளையர்களை பிடிக்க சென்ற காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருக்கிறார். அவர் ஒரு உண்மையான ஹீரோ. அவர் மக்களை பாதுக்காக்கும் பணிக்காக தன் உயிரை தியாகம் செய்திருக்கிறார். அவரது துணிவுக்காக அவரை நான் வணங்குகிறேன். அவருடைய இழப்பு தாங்கிக் கொள்ள முடியாதது மற்றும் இதற்கு காரணமான நபர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது”என்று பதிவிட்டுள்ளார். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com