பாகுபலியைப் பற்றி தவறாகப் பேசினேனா?.... பா.இரஞ்சித் ஷாக்

பாகுபலியைப் பற்றி தவறாகப் பேசினேனா?.... பா.இரஞ்சித் ஷாக்

பாகுபலியைப் பற்றி தவறாகப் பேசினேனா?.... பா.இரஞ்சித் ஷாக்

பாகுபலி 2 படம் இயக்குனர் ரஞ்சித்துக்கு ஒரு புதிய சிக்கலைக் கொடுத்து விட்டது.

கபாலி படத்திற்கு பிறகு, மீண்டும் ரஜினியுடன் இணைந்து தன் நான்காவது படத்தின் படப்பிடிப்பை துவங்கும் முனைப்பில் இருக்கிறார் பா.இரஞ்சித். அவர் தன்போக்கில் வேலையைச் செய்து கொண்டிருக்க, பாகுபலி படத்தில் சமூகக் கருத்துக்கள் இல்லை என்று இரஞ்சித் சொன்னார் என்று யாரோ கிளப்பிவிட, சமூக வலைத்தளங்களில் பாகுபலி ரசிகர்கள் கொந்தளித்து விட்டார்கள்.

பாகுபலி படத்தில் சமுதாய கருத்து இல்லை என்று கூறும் இரஞ்சித் மெட்ராஸ், கபாலி படங்களில் சமுதாயத்திற்கு உதவும் என்ன கருத்தை கூறிவிட்டார்? எனக் கேட்கின்றனர்.

இது ஒரு புறமிருக்க இரஞ்சித்துக்கு ஆதரவாகவும் சிலர் பதிவுகளை போட்டு வருகின்றனர். இது எப்படி அவர் கருத்தாகும். கற்றறிந்த மக்கட்கு ஆதாரமற்ற குற்றச்சாட்டு அழகல்ல என்று சிலர் இரஞ்சித்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சர்ச்சை பற்றி புதிய தலைமுறையிடம் பேசிய இயக்குனர் இரஞ்சித், பாகுபலி 2 படத்தை நான் எங்கும் விமர்சனம் செய்யவில்லை என்று கூறினார். மேலும், தான் அந்த படத்தை மிகவும் ரசித்ததாகவும், படம் மிக பெரிய ஹிட் என்றும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com