‘ஒரே இந்தியானு கூவுறியே, காவிரில மட்டும் கட்டம் தாவுறியே?’ - பா.விஜய்

‘ஒரே இந்தியானு கூவுறியே, காவிரில மட்டும் கட்டம் தாவுறியே?’ - பா.விஜய்
‘ஒரே இந்தியானு கூவுறியே, காவிரில மட்டும் கட்டம் தாவுறியே?’ - பா.விஜய்

‘ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க. எங்க பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க’ என பாடலாசிரியர் பா.விஜய்  ட்விட்டரில் வீடியோ கவிதை பாடியுள்ளார். 

அதில்,

தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு.. 
    முதல்ல தரங்கெட்டுப் போன அதிகார வர்க்கத்த சரிகட்டு..! 

சே..சே..னு கூட்டம் மிதப்புல மிதக்கலாம் சேப்பாக்காம். 
    அத செங்கல் செங்கலா எங்க சிங்கக் கூட்டம் தூள் தூளாக்கும்..! 

கடற்கரை ஓரத்த பூட்டி வச்சிப்புட்டியே காவலாளி.. 
    புயல் காத்துக்கு பூட்டு போட்டவன் யாருடா புத்திசாலி..! 

ஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க.. 
    எங்கப் பசங்க ஒருநாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க..! 

விளம்பரத்துல தன்னையே வித்தவனெல்லாம் வீரன்ற.. 
    தேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவன்ற..! 

ஒரே இந்தியா ஒரே ரத்தம்னு கூவுறியே.. 
    அட காவிரிக்கு மட்டும் கட்டத்த மாத்தி தாவுறியே..! 

ஆவட்டும் சாரே! ஆன வரைக்கும் ஊர ஏமாத்து.. 
    எங்கப் பச்சத்தமிழனுக்கு புரிஞ்சு போச்சு உங்க பம்மாத்து..! 

காவிரி எங்க கரிகாலனால தாண்டா ஆறாச்சு..
    எங்க தொண்டைய மிறிச்சு தொண்டுனு சொல்லுற வாய் சேறாச்சு..! 

காவிரில பல பேர் கால் கழுவ மட்டும்தான், கால் வச்சான்.. 
    அப்புடி வீணான தண்ணியில விவசாயத் தமிழன்தான் நெல் வச்சான்..! 

பால் குடிச்ச சிசுவோட கழுத்த நெறிச்ச பேய்க்கூட்டம்.. 
    உங்கள விரட்டி அடிச்சு, வெளுக்கத் தாண்டா இந்தப் போராட்டம்..!

என்று எழுதியுள்ளார். இதை அவரே பாடல்போலவும், படித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com