Park Joon-woo இயக்கத்தில் உருவாகியுள்ள சீரிஸ் `Crash’. ட்ரஃபிக் குற்றங்களை கையாளும் குழவை பற்றிய கதை.
Shin Yeon-shick இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Uncle Samsik'. 1960களில் நடக்கும் கதை. இரு ஆண்களுக்கு இடையே உருவாகும் நட்பு, பகை இவையே கதை.
Prakash Narayan எழுதி Nipun Dharmadhikari இயக்கியுள்ள சீரிஸ் `Lampan’. லம்பன் நகரத்தில் இருந்து தனது பாட்டி தாத்தா வீட்டுக்கு வருகிறான். இங்கு தங்கும் சமயத்தில் அவன் விஷயங்களை சந்திக்கிறான் என்பதே கதை.
Josh Brolin லீட் ரோலில் நடித்த சீரிஸ் `Outer Range’. தற்போது இதன் இரண்டாவது சீசன் வெளியாகவுள்ளது. தனது நிலத்துக்காகவும் குடும்பத்துக்காகவும் சண்டை செய்யும் rancher சம்பந்தப்பட்ட கதை.
வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள சீரிஸ் `தலைமை செயலகம்’. முதலமைச்சர் மீது விழும் ஊழல் குற்றச்சாட்டு, ஜார்கண்டில் நடக்கும் கொலைகள். இவை இரண்டும் இணையும் புள்ளி எது என்பதே கதை.
ஜீவன் - நவீன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சீரிஸ் `Baahubali : Crown of Blood'. பாகுபலி படங்களின் கதைக்கு முன் கதையாக உருவாக்கியிருக்கிறார்கள். பாகுபலியும், பல்லால தேவனும் இணைந்து மகிஷ்மதியை காப்பாற்ற எப்படி போராடினார்கள் என்பதே கதை.
Jared Hess & Lynn Wang இயக்கியிருக்கும் அனிமேஷன் படம் `Thelma the Unicorn’. யுனிகார்ன் ஆக ஆசைப்படும் குதிரைக்கு என்ன நடக்கிறது என்பதே கதை.
பி வி ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், இவானா நடித்த படம் `கள்வன்’. கெம்பன் ஒரு தாத்தாவை தத்தெடுத்து ஊருக்குள் நுழைகிறான். அதற்கு முன் அவன் வாழ்வில் என்ன நடந்தது, அதற்கு பின் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
இருட்டு அறையில் படத்தின் இரு பாகங்களை இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார், மீண்டும் அடல்ட் ஸோனில் இறங்கிய படமே `The Boys. ஒரே வீட்டில் வசிக்கும் சில நண்பர்களின் வாழ்வில் நடக்கும் விஷயங்களே கதை.
ஸ்ரீனிதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Blink’. அபூர்வா, கல்லூரி படிப்பு, வேலை வாய்ப்பு, காதல் என வாழ்வின் எல்லா கோணங்களிலும் தடுமாறிக் கொண்டிருக்கும் இளைஞன். ஒரு நாள் அவன் கண்ணில் படும் நபர் ஒருவரால் வாழ்க்கை இன்னும் சிக்கலாகிறது. அதை எப்படி தீர்த்தான் என்பதை பரபரவென சொல்லியிருக்கிறார்கள்.
S. J. Clarkson இயக்கத்தில் Dakota Johnson நடித்த படம் `Madame Web'. Cassandra Webb என்ற எதிர்காலத்தை கணிக்கக் கூடிய பெண், மூன்று இளம் பெண்களுடன் இணைந்து நடத்தும் சாகசங்களே கதை.
அடியே படம் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் கார்த்திக், அவரது யூ-ட்யூப் ஷாட்ர்ஃபிலிம் ஸ்டைலில் இயக்கிய படம் `ஹாட்ஸ்பாட்’. காதல், திருமண உறவு பற்றி பேசக் கூடிய படமாக உருவாகியிருக்கிறது.
Manikanth Gelli இயக்கத்தில் உருவான படம் `Vidya Vasula Aham’. வித்யா மற்றும் வாசு இருவரும் குடும்பத்தல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்கிறது. இருவருமே ஈகோ பிடித்த ஆட்கள் என்பதால், அவர்கள் அன்பை ஈகோ முந்துகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
`The Kerala Story’ மூலம் புயலைக் கிளப்பிய Sudipto Sen அடுத்து இயக்கிய படம் `Bastar: The Naxal Story'. சத்தீஸ்கரில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருப்பதாய் சொல்லப்படுகிறது.
Luka Chuppi, Mimi போன்ற இந்திப் படங்களை இயக்கிய லக்ஷ்மன் உடேகர் இயக்கிய இந்திப் படம் தான் `Zara Hatke Zara Bachke'. கபில் - சௌம்யா சந்தோசமான தம்பதி. கூட்டுக் குடும்பத்தில் வாழும் இவர்கள் விவாகரத்து பெற முடிவு செய்கிறார்கள். இது அவர்களின் குடும்பத்திற்கு தெரிந்த பின் நடக்கும் கலாட்டாக்களே படம்.
Kumara Swamy இயக்கத்தில் உருவான படம் `Sharathulu Varthisthai'. சிரஞ்சீவி ஒரு மிடில் க்ளாஸ் நபர், அரசு ஊழியரும் கூட. அவருக்கு நடக்கும் ஒரு சம்பவம் வாழ்க்கையை புரட்டி போடுகிறது. அது என்ன, அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதே கதை.
Jaya Jaya Jaya Jaya Hey படம் இயக்கிய விபின் தாஸ் தற்போது இயக்கியுள்ள படம் `Guruvayoor Ambala Nadayil’. ஒரு இளைஞனுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் இந்த கல்யாணத்தில் மணப்பெண்ணுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அவளது அண்ணன் இந்த திருமணத்தை நடத்தியே தீருவேன் என களம் இறங்குகிறார். பின்பு நடப்பவையே கதை.
`Android Kunjappan Version 5.25’, `Kanakam Kaamini Kalaham’, `Nna Thaan Case Kodu’ போன்ற அட்டகாசமான படங்களைக் கொடுத்தவர் ரதீஷ். Nna Thaan Case Kodu படத்தின் சுரேஷ் - சுமலதா கதாப்பாத்திரங்களை எடுத்து ஸ்பின் ஆஃப் ஆக அவர் இயக்கியுள்ள படம் `Sureshinteyum Sumalathayudeyum Hridayahariyaya Pranayakatha'.
`சேத்துமான்’ படத்தை இயக்கிய தமிழ் அடுத்து இயக்கியிருக்கும் படம் `எலக்ஷன்’. தந்தையின் விருப்பத்திற்காக அரசியலுக்குள் நுழையும் மகன் சந்திக்கும் விஷயங்களே படம்.
ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் `இங்க நான் தான் கிங்கு’. எதிர்பாராத விதமாக ஒரு குடும்பம், ஒரு கொலையில் சம்பந்தப்படுகிறது. அதை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் போது என்ன நடக்கிறது என்ற காமெடியே படம்.
யாஷிகா ஆனந்த் நடித்துள்ள படம் `படிக்காத பக்கங்கள்’.. ஏற்காட்டில் நடக்கும் ஒரு கொலை, அதைத் தொடர்ந்து அவிழும் மர்மங்களே கதை.