விஜய்யை வம்புக்கு இழுக்கும் ஆண்ட்ரியா

விஜய்யை வம்புக்கு இழுக்கும் ஆண்ட்ரியா

விஜய்யை வம்புக்கு இழுக்கும் ஆண்ட்ரியா
Published on

தரமணி படத்திற்குப் பிறகு தனக்கு பட வாய்ப்புகளே இன்னும் வரவில்லை என நடிகை ஆண்ட்ரியா வருத்தம் தெரிவித்துள்ளார்.

‘தரமணி’ படத்திற்குப் பிறகு நல்ல நடிகையாக பார்க்கப்படுகிறார் நடிகை ஆண்ட்ரியா. ஆனால் அவர் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ போன்ற படங்களிலேயே தனது அழுத்தமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் என்பது பலரும் மறந்தக் கதை. அதோடு நடிகர் கமல்ஹாசனுடன் அறிமுக ஏற்பட்ட பிற்பாடு அவரது நடிப்பில் இன்னும் அழகு சேர்ந்தது.

பாடகி, நல்ல நடிகை, டான்ஸர், உதவி இயக்குநர் என பல முகங்கள் கொண்ட ஆண்ட்ரியா சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கலந்துக் கொண்டார். அப்போது அவர் மிக வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். “எனக்கு ‘தரமணி’ படத்தின் மூலம் நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்துள்ளது. ஆனால் அதற்குப் பிறகு இன்னும் எனக்குப் பட வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. விஜய்யுடன் ஒரு படத்தில் பாட்டுக்கு ஆடிவிட்டுப்போன நடிகைக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இங்கே நல்ல கதையம்சம் உள்ள படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைக்கு வாய்ப்புக்கள் வருவதில்லை. விஜய்யுடன் சேர்ந்து நடித்தால்தான் நல்ல நடிகையா? நல்ல கேரக்டரில் நடிப்பவர்கள் நல்ல நடிகை இல்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com