ஓராண்டை நிறைவு செய்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’: பூரிப்பில் துல்கர் சல்மான்

ஓராண்டை நிறைவு செய்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’: பூரிப்பில் துல்கர் சல்மான்
ஓராண்டை நிறைவு செய்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’: பூரிப்பில் துல்கர் சல்மான்

நடிகர்கள் துல்கர் சல்மான், ரித்து வர்மா ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன், கவுதம் வாசுதேவ் மேனன் (இயக்குனர்) ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இயக்குனர் தேசிங் பெரியசாமி இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து திரைக்கதையை அமைத்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்திருப்பார் இயக்குனர் தேசிங். 

இன்றோடு இந்த படம் திரையரங்குளில் வெளியாகி ஓராண்டை நிறைவு செய்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக இந்த தகவலை ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் துல்கர் சல்மான். 

<div class="fb-post" data-href="https://www.facebook.com/DQSalmaan/posts/271792874305422" data-width="500" data-show-text="true"><blockquote cite="https://www.facebook.com/DQSalmaan/posts/271792874305422" class="fb-xfbml-parse-ignore">
Love heists bromance twists turns thrills !! One of the most fun films I’ve worked on and one of the biggest hits !...Posted by <a href="https://www.facebook.com/DQSalmaan">Dulquer Salmaan on <a href="https://www.facebook.com/DQSalmaan/posts/271792874305422">Sunday, 28 February 2021

பாடல்கள், வசனங்கள் என அனைத்தும் இந்த படத்தில் அமர்க்களமாக இருந்தது. கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக திரையில் வெளிவந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் கல்லா கட்டியிருந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என்ற ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். ‘விரைவில் வரும்’ என்பதே படக்குழுவின் பதிலாக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com