அன்புச்செழியன் மீது மேலும் ஒரு தயாரிப்பாளர் புகார்

அன்புச்செழியன் மீது மேலும் ஒரு தயாரிப்பாளர் புகார்
அன்புச்செழியன் மீது மேலும் ஒரு தயாரிப்பாளர் புகார்

பைனான்சியர் அன்புச்செழியன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மேலும் ஒரு தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார்.

இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். இவரின் தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என்று அவர் கடிதத்தில் எழுதி இருந்தது, சினிமா உலகில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அன்புச்செழியன் தலைமறைவானார். அவரை தேடும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் அன்புச்செழியனின் ஆதரவாளர் ஒருவர், விஷால் மற்றும் எதிராக உள்ள தயாரிப்பாளர்களை மிரட்டும் வகையிலும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

எனவே இந்த வீடியோவை வெளியிட்ட நபர் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மணிமாறன் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் அனைத்து தயாரிப்பாளர்களையும் மிரட்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகார் மனுவில் மணிமாறன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது பைனான்சியர் அன்புச்செழியன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com