விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படம்: அக்டோபரில் ஷூட்டிங் துவக்கம்!

விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படம்: அக்டோபரில் ஷூட்டிங் துவக்கம்!
விஷால் - ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படம்: அக்டோபரில் ஷூட்டிங் துவக்கம்!

’அவன், இவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் அக்டோபரில் துவங்கவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில், விஷால் பெண் கெட்டப்பில் ஒரு பாடலில் நடனமாடி நடிப்பில் மிரட்டியிருப்பார். விஷால், ஆர்யா இருவரும் போட்டிக்கொண்டு சிறந்த நடிப்பை வழங்கினார்கள். இருவருமே நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், 9 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படபிடிப்புகள் ஏப்ரல் மாதம் தொடங்கவிருந்த நிலையில் கொரோனா தொற்றால் அனைத்து படப்பிடிப்புகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

(இயக்குநர் ஆனந்த் சங்கர்)

இந்நிலையில், ஷூட்டிங் நடத்த தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியதால், மீண்டும் இப்படத்தின் ஷூட்டிங் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் மீண்டும் துவங்கவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. இம்மாத இறுதியில் ஹீரோயின்கள் மற்றும் துணை நடிகர்கள் அறிவிக்கப்படவுள்ளார்கள். இப்படத்தில், விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆனந்த் சங்கர் ஏற்கனவே, கடந்த 2014 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் ‘அரிமா நம்பி’, 2016 ஆம் ஆண்டு விக்ரம், நயன்தாரா நடிப்பில் ‘இருமுகன்’, 2018 ஆம் ஆண்டு விஜய் தேவாரகொண்டா நடிப்பில் ‘நோட்டா’ படங்களை இயக்கியிருந்தார்.

இந்நிலையில், விஷால், ஆர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com