நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திரைத்துறையில் ஒரு வேலையும் நடைபெறவில்லை. அனைத்து நட்சத்திரங்களும் வீட்டிலேயே முடங்கிப் போய் உள்ளனர். இந்த நேரத்தில் பல திரை நட்சத்திரங்கள் கொரோனாவுக்கு எதிராக விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிடுவது, வீட்டில் ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்வது, வீட்டுத் தோட்டம் போடுவது எனப் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி செய்யும் வேலைகளை அவர்கள் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவது, ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பதிவிட்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக நடிகை சிம்ரன் அதிக தகவல்களைப் பகிர்ந்து வருகிறார்.