ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன் 3வது முறையாக மீண்டும் இணைந்த நயன்தாரா

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன் 3வது முறையாக மீண்டும் இணைந்த நயன்தாரா
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸுடன் 3வது முறையாக மீண்டும் இணைந்த நயன்தாரா

’ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்  நடிகை நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி தொடங்குகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மாயா’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படம் வெற்றி பெற்றதால்தான் நயன்தாரா அடுத்தடுத்து நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தார். ‘டோரா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘கொலையுதிர் காலம்’ உள்ளிட்டப் படங்களும் வெளியானது. ‘மாயா’ வெற்றியை தொடர்ந்து முன்னனி நாயகிகள் பலரும் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரங்கள் நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.

இப்படி, நடிகைகளுக்கு துணிச்சலைக் கொடுத்த ‘மாயா’ படத்தை தனது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் மூலமாக தயாரித்தவர் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு. அடுத்ததாக இவரது தயாரிப்பில் நயன்தாரா - கார்த்தி நடிப்பில் ‘காஷ்மோரா’ வெளியானது. அதுவும் சூப்பர் ஹிட். இந்த நிலையில், இக்கூட்டணி ஹாட்ரிக் வெற்றி கொடுக்க மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. நாயகிக்கு முக்கியத்தும் கொண்ட, இந்தத் திரைப்படத்தை வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் விக்னேஷ் இயக்கவிருக்கிறார். இதற்காக, முதற்கட்ட பணிகளை முடித்த  படக்குழுவினர் படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்.  வரும் 15ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக தமிழழகன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com