பகவதி அம்மன் கோயிலுக்கு வந்த நயன்தாரா: குவிந்த ரசிகர்கள்!

பகவதி அம்மன் கோயிலுக்கு வந்த நயன்தாரா: குவிந்த ரசிகர்கள்!
பகவதி அம்மன் கோயிலுக்கு வந்த நயன்தாரா: குவிந்த ரசிகர்கள்!

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம் செய்தார். 

காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி கதை, திரைக்கதையில் உருவாகவுள்ள படம் ‘மூக்குத்தி அம்மன்’. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இந்தப்படத்தை தயாரிக்கிறது. பாலாஜியோடு இணைந்து என்.ஜே.சரவணன் இயக்குநர் பொறுப்பைக் கவனிக்க உள்ளார்.

இந்தப்படத்தில் நடிகை நயன்தாரா பகவதி அம்மனாக நடிக்கவுள்ளார். படத்திற்காக படக்குழுவினர் அனைவரும் சைவத்துக்கு மாறி உள்ளதாகவும், நடிகை நயன்தாரா விரதம் இருந்து வருவதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் கன்னியாகுமரியிலுள்ள பிரசித்திப்பெற்ற பகவதியம்மன் திருக்கோயிலுக்கு நேற்று இரவு நயன்தாரா வருகை தந்தார். இயக்குநர் விக்னேஷ் சிவனும் உடன் வந்தார். அவரை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்று சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனர். 

நடிகை நயன்தாரா கோயிலுக்கு வந்த செய்தி பரவியதை அடுத்து அப்பகுதியில் ரசிகர்கள் குவிந்தனர். மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள நிலையில் அங்குள்ள அம்மன் கோயிலில் நயன்தாரா சாமி தரிசனம் செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com