தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படும் நயன்தாரா, தமிழ், தெலுங்கு என பிஸியாக வலம் வருகிறார். தமிழில் மட்டும் ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் கமிட்டாகி உள்ள அவர், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர்கிறார். மோகன் ராஜா இயக்கிய ’தனிஒருவன்’ படத்திலும் நயன்தாரா தான் ஹீரோயின். வேலைக்காரன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்று முதல் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோல்டன் பீச் ரெஸ்டாரெண்டில் நடந்து வருகிறது. இதில் மீண்டும் சிவகார்த்திகேயன் –நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் முதல்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா.