நாமக்கல்: விபத்தில் உயிரிழந்த ரசிகர் - நேரில் சென்று ஆறுதல் கூறி நடிகர் சூர்யா அஞ்சலி

நாமக்கல்: விபத்தில் உயிரிழந்த ரசிகர் - நேரில் சென்று ஆறுதல் கூறி நடிகர் சூர்யா அஞ்சலி
நாமக்கல்: விபத்தில் உயிரிழந்த ரசிகர் - நேரில் சென்று ஆறுதல் கூறி நடிகர் சூர்யா அஞ்சலி

விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் கூறி ரசிகரின் உருவ படத்திற்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார்.

நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (25). இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும் 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி நாமக்கல் துறையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது நாமக்கல் காவல் நிலையம் அருகே சாலையின் வளைவில் திரும்பும்போது லாரி ஒன்று இவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகதீஷ் ஆன்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த ஜெகதீஷ், நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகராக இருந்து வருவதோடு, 15 வருடமாக மன்ற பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, நாமக்கல் மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று வந்த நடிகர் சூர்யா, உயிரிழந்த ஜெகதீஷின் மனைவி ராதிகா மற்றும் அவரது உறவினர்களுக்கு கண் கலங்கியவாறு ஆறுதல் தெரிவித்து ஜெகதீஷின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து உயிரிழந்த ஜெகதீஷின் மனைவி ராதிகா கூறுகையில், உடன்பிறந்த சகோதரர் போன்று நேற்று நடிகர் சூர்யா ஆறுதல் தெரிவித்தார். சூரியா அவர்கள் வருவதை எதிர் பார்க்கவில்லை;. குழந்தையின் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் ரசிகர் மன்றத்தின் சார்பில் அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் வாக்குறுதி அளித்தார்.

மேலும் தனது குழந்தையின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு தனக்கு ஏதாவது வேலை ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தேன் அதனை நிறைவேற்றித் தருவதாக நடிகர் சூர்யா தெரிவித்ததாக ராதிகா கண் கலங்கியபடி கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com