\
சிங்கப்பூரில் ஊழல் இல்லை: ராதிகா ட்விட்

சிங்கப்பூரில் ஊழல் இல்லை: ராதிகா ட்விட்

சிங்கப்பூரில் ஊழல் இல்லை: ராதிகா ட்விட்
Published on

சிங்கப்பூரில் ஊழல் கிடையாது என்று நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய நாடே மெர்சல் விவகாரம் குறித்து விவாதித்து வருகிறது. அந்த விவாதத்தின் மைய பொருளாக சிங்கப்பூர் இருந்து வருகிறது. ரஜினி கூட உலக தலைவர்களில் தனக்குப் பிடித்த தலைவர் சிங்கப்பூர் லீகுவான் யூ என தெரிவித்திருந்தார். சிங்கப்பூரை பற்றி பலரும் பல்வேறுவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 
இந்த நிலையில் ராதிகா  தனது ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் மக்கள் தொகை குறைவாக இருப்பதினால்தான் அங்கு சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே அங்கு ஊழலும் இல்லை. நமது மக்கள் தொகையை வைத்து அந்தளவுக்கு கொண்டு வர முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com