மீ டு விவகாரம்: மோகன்லால் பற்றி என்ன சொல்கிறார் பிரகாஷ் ராஜ்?

மீ டு விவகாரம்: மோகன்லால் பற்றி என்ன சொல்கிறார் பிரகாஷ் ராஜ்?
மீ டு விவகாரம்: மோகன்லால் பற்றி என்ன சொல்கிறார் பிரகாஷ் ராஜ்?

மீ டு விவகாரத்தில் நடிகர் மோகன்லால் போன்றோரிடம் இருந்து இந்த சமூகம் நிறைய எதிர்பார்க்கிறது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார்.

நடிகர் பிரகாஷ் ராஜ், மோகன்லாலுடன் இணைந்து ’ஓடியன்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் கேரளா சென்றிருந்த பிரகாஷ் ராஜ் கூறும்போது, ’’மோகன்லாலும் நானும் மணிரத்னத்தில் ’இருவர்’ படத்தில் ஒன்றாக நடித்தோ ம். அப்போது நண்பர்கள் ஆனோம். அந்த நேரத்தில் நான் ஆரம்பகட்ட நடிகன். மோகன்லால் மூத்த நடிகர். இருந்தாலும் அவர் என் மீது காட்டிய அக்கறை, அன்பு அலாதியானது. பின்னர் நாங்கள் ’பிரின்ஸ்’ படத்தில் ஒன்றாக பணியாற்றினோம்.

இப்போது  ’ஒடியன்’ படத்தில் நடித்துள் ளோம். இந்தப் படம் மேஜிக்கல் ரியலிசம் தொடர்பான கதையை கொண்ட படம். நன்மை மற்றும் தீமைக்கான மோதல்தான் கதை’ என்ற பிரகா ஷ் ராஜிடம், ’மீ டு மூலம் பாலியல் புகார் சொல்வது ஃபேஷனாகிவிட்டது. இதை இயக்கமாகக் கருத \முடியாது. இது ஒரு ஃபேஷன் ட்ரெண்ட் டைப் போன்றது. இந்த ட்ரெண்ட் இன்னும் சில நாள்களுக்கு இருக்கும்’ என்று மோகன்லால் கூறியிருப்பது பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், ’மோகன்லால் சிறந்த நடிகர், சிறந்த மனிதர். அறிவுப்பூர்வமானவர். அவர் ஒரு வேளை இதுபற்றி யோசிக்காம ல் சொல்லியிருக்கலாம். அவர் வேண்டுமென்றே சொன்னதாக நான் நம்பவில்லை. இருந்தாலும் #Metoo போன்றவை இன்னும் கவனமாக கை யாளப் பட்டிருக்க வேண்டும். அவரைப் போன்றவர்களிடம் இருந்து சமூகம் நிறைய எதிர்பார்க்கிறது’ என்றார். 



அவர் மேலும் கூறும்போது, ‘மீ டூ பெண்களுக்கான வலுவான அதிகாரம். பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும்போது நாம் அமைதி காத்துக் கொண்டிருந்தால், நாம் குற்றவாளிகளுக்கு ஆதரவளிப்பதாக ஆகிவிடும். காயங்களாலும், வலிகளாலும் பெண்கள் பாதிக்கப்படுவது உண்மை. மீ டூவின் ஆழத்தையும் நோக்கத்தையும் நாம் நிச்சயமாக புரிந்துகொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com