“இதனால்தான் தியேட்டர்களுக்கு 100% அனுமதி வழங்கப்பட்டது”- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

“இதனால்தான் தியேட்டர்களுக்கு 100% அனுமதி வழங்கப்பட்டது”- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

“இதனால்தான் தியேட்டர்களுக்கு 100% அனுமதி வழங்கப்பட்டது”- அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
Published on

எதன் அடிப்படையில் தியேட்டர்களுக்கு 100% அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா பரவல் தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பது மருத்துவக் குழுவுக்கு தெரியும். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்ததால் வாழ்வாதாரம் மேம்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் குறைந்து வருகிறது. உருமாறிய கொரோனாவையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். இந்த அடிப்படையில் தான் 100% திரையரங்கம் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டர்கள் மருத்துவக் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து அச்சம் கொள்ள தேவையில்லை” என்றார்.

தமிழகத்தில் தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி கொடுத்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் எதன் அடிப்படையில் தியேட்டர்களுக்கு 100% அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com