மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி, மகனுக்கு கொரோனா

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி, மகனுக்கு கொரோனா
மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி, மகனுக்கு கொரோனா

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மனைவியான மேக்னாராஜ், அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரும், நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது இறப்பு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது.

சிரஞ்சீவி சர்ஜா இறக்கும்போது அவரது மனைவியான மேக்னாராஜ் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கணவரின் இறுதிச்சடங்கில் சர்ஜாவுக்கு அவர் கண்ணீருடன் முத்தமிட்டது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

இதனைத்தொடர்ந்து அவருக்கு வளைக்காப்பு நடத்தப்பட்டது. வளைகாப்பில் இறந்த சிரஞ்சீவி சர்ஜாவின் பேனர் ஆள் உயர அளவில் வைக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலும் ஆனது. அதனைத்தொடர்ந்து மேக்னா ராஜ்க்கு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தற்போது மேக்னா ராஜ், அவரது மகன் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை மேக்னாராஜ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறும்போது  “ வணக்கம், நான் எனது மகன், தந்தை, தாய் ஆகியோருக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளது. ஆகையால் கடந்த சில வாரங்களில் எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளுங்கள்.

எனது ரசிகர்கள் இந்தச் செய்தியை கேட்டு பதட்டமடைய வேண்டாம். குழந்தையான ஜுனியர் சிரு நலமாக உள்ளான். நாங்கள் சிகிச்சை எடுத்து வருகிறோம். சிரு எங்களின் ஒவ்வொரு நொடியையும் ஆக்கிரமித்துள்ளான். நாங்கள் இதனை எதிர்கொண்டு வெற்றியடைவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com