”அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” - கே.வி. ஆனந்த் மறைவுக்கு ரஜினி இரங்கல்

”அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” - கே.வி. ஆனந்த் மறைவுக்கு ரஜினி இரங்கல்
”அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்” - கே.வி. ஆனந்த் மறைவுக்கு ரஜினி இரங்கல்

பிரபல திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ மதிப்பிற்குரிய கே.வி.ஆனந்த் அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்.” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, அயன், மாற்றான், கவண், காப்பான், கோ, அநேகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய 54 வயதான கே.வி. ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது திடீர் மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கமல், குஷ்பூ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அவருக்கு தங்களது இரங்கலை தனது சமூகவலைதளப்பக்கங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com