“மன்னிப்பது தெய்வ குணம்” - மன்சூர் அலிகான் மன்னிப்பு கோரிய நிலையில் த்ரிஷா பதிவு!

த்ரிஷா குறித்து தான் கூறிய சர்ச்சையான பேச்சுக்கு இறுதியில் மன்னிப்பு கோரிய நடிகர் மன்சூர் அலிகான். “ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு!” என்று அறிக்கையை வெளியிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
த்ரிஷா - மன்சூர் அலிகான்
த்ரிஷா - மன்சூர் அலிகான்File image

நடிகை த்ரிஷா குறித்த மன்சூர் அலிகானின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் மன்சூர் அலிகான். அந்த மன்னிப்பை த்ரிஷாவும் ஏற்றுள்ளார்.

முன்னதாக நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கள் சர்ச்சையாகி இருந்தது. இதற்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து த்ரிஷா, “அவர் பெண்மைக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவருடன் இனிமேல் சேர்ந்து நடிக்கமாட்டேன். இதுவரை நடிக்காததை நினைத்து நிம்மதி அடைகிறேன். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து த்ரிஷாவுக்கு ஆதரவாக இயக்குநர் லோகோஷ் கனகராஜ், பாடகி சின்மயி, நடிகை குஷ்பூ, மேலும் பல திரைப்பிரபலங்களும் பொது மக்களும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் இது வழக்காகவும் பதிவானது. அதில், நேற்று ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் ஆஜரானார் மன்சூர் அலிகான். நேற்று ஆஜரான நிலையில், இன்று காலை த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அவர்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

அதில், “ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன் எனை மன்னித்துவிடு!

ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்! எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்கானோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.

காவல் அதிகாரி அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம்தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!

த்ரிஷா - மன்சூர் அலிகான்
“தலைமறைவாகிற ஆள் நானில்லை” - மன்சூர் அலிகான்!
மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்pt web

சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண், மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன்கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது.

த்ரிஷா - மன்சூர் அலிகான்
VICHITHRA முதல் TRISHA வரை..! பெரிய நடிகர்களே இப்படி பேசுறாங்க

எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!

என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணாடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம்.

த்ரிஷா - மன்சூர் அலிகான்
த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகான் நாளை ஆஜராக காவல்துறை சம்மன்
மன்சூர் அலிகான் - த்ரிஷா
மன்சூர் அலிகான் - த்ரிஷாPT Web

மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும். அதானிந்தியா மார்பில் தவழும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியை கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை. ஆம்!

பெண்ணிலிருந்துதான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றர் நபிகளார் அவர்கள். பெண்மை புனிதம். காரணத்தோடுதான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார்.

எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8' வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10, ஆம் வகுப்புவரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்!

எனது சக திரைநாயகி திரிஷாவே

என்னை மன்னித்துவிடு!

த்ரிஷா
த்ரிஷா

இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்.

---மன்சூர் அலிகான் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி நீண்ட மன்சூர் அலிகானின் மன்னிப்புக்கு, த்ரிஷா ரியாக்ட் செய்துள்ளார். அதில் அவர், “To err is human, to forgive is divine” என்றுள்ளார்.

அதாவது, “தவறு செய்வது மனித குணம். மன்னிப்பது தெய்வ குணம்” என்று கூறியுள்ளார். மன்சூர் அலிகான் காலையில் மன்னிப்புக்கோரிய நிலையில், த்ரிஷா இப்போது போட்டுள்ள இப்பதிவு, மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com