நடிகை மஞ்சு வாரியர் புகார்: ’ஒடியன்’ படக்குழுவிடம் போலீசார் விசாரணை

நடிகை மஞ்சு வாரியர் புகார்: ’ஒடியன்’ படக்குழுவிடம் போலீசார் விசாரணை
நடிகை மஞ்சு வாரியர் புகார்: ’ஒடியன்’ படக்குழுவிடம் போலீசார் விசாரணை

மலையாள இயக்குநர் மீது நடிகை மஞ்சு வாரியர் கூறிய புகாரை அடுத்து, ’ஒடியன்’ படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மலையாள திரைப்பட இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன், ‘ஒடியன்’ என்ற படத்தை 2018 ஆம் ஆண்டு இயக்கினார். இதில் மோகன்லால், மஞ்சுவாரியர், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது, நடிகை மஞ்சு வாரியர், கேரள டிஜிபியிடம் புகார் அளித்தார். அதில், ’ஓடியன்’ ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகுமார், சமூக வலைத்தளங்களில் என்னை அவமானப்படுத்தி வருகிறார். இதை கண்டுகொள்ளாமல் இருந்தேன். ஆனால் அவரும் அவர் நண்பர் மாத்யூ சாமுவேலும் எனக்கு எதிராக அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன்’ என்று கூறினார். இந்த புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மஞ்சு வாரியரின் புகாருக்கு ஸ்ரீகுமார் மேனன் பதிலளித்திருந்தார். அதில், ‘பத்திரிகைகளில் பார்த்தே புகாரைத் தெரிந்துகொண்டேன். உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. உங்களால் மிரட்டல்களையும் அவமானங்களையும் சந்தித்து விட்டேன். என் மீதான உங்கள் புகாரை சட்டப்படி சந்திக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

நடிகை மஞ்சு வாரியரின் புகாரை அடுத்து, திருச்சூர் கிழக்கு போலீசார், இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். ’ஒடியன்’ படப்பிடிப்பில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தபோது, அனைவர் முன்பும் தன்னை ஸ்ரீகுமார் அவமானக நடத்தினார் என்றும் மஞ்சு வாரிய புகாரில் கூறியிருந்தார். 

இந்நிலையில் படத்தின் கேக் வெட்டும் நிகழ்ச்சியின்போது இருந்த, தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், தயாரிப்பு நிர்வாகி சாஜி சி ஜோசப், மஞ்சு வாரியரின் ஆடிட்டர் மற்றும் அதில் பங்கேற்றவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் வாக்குமூலங்களை பெற்ற போலீசார், இன்னும் சில சாட்சிகளிடம் விசாரணை நடத்த இருக்கின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com