இமாச்சலில் நிலச்சரிவு, போக்குவரத்துத் துண்டிப்பு: நடிகை மஞ்சுவாரியர் உட்பட படக்குழு தவிப்பு!

இமாச்சலில் நிலச்சரிவு, போக்குவரத்துத் துண்டிப்பு: நடிகை மஞ்சுவாரியர் உட்பட படக்குழு தவிப்பு!
இமாச்சலில் நிலச்சரிவு, போக்குவரத்துத் துண்டிப்பு: நடிகை மஞ்சுவாரியர் உட்பட படக்குழு தவிப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக, நடிகை மஞ்சுவாரியர் உட்பட மலையாளப் படக்குழுவைச் சேர்ந்த சுமார் 30 பேர் சிக்கிக்கொண்டனர்.

வடமாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. இதில் ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம் உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் உட்பட பல மாநிலங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. இமாச்சலப்பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள் ளத்திற்கு இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக, பலப் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

குலு மாவட்டத்தில் உள்ள ரோடாக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மணாலி - லே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் ஏராளமான வாகனங்களும் சிக்கியுள்ளன.

இந்நிலையில் மலையாளப் பட இயக்குனர் சணல்குமார் சசிதரன் (செக்ஸி துர்க்கா படத்தை இயக்கியவர்), இயக்கும் மலை யாளப் படத்தின் ஷூட்டிங் இமாச்சலில் உள்ள சத்ரா பகுதியில் நடந்துவந்தது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தி ல் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்துவருகிறார். 

இந்த சத்ரா பகுதியும் கனமழைக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதால், தனித்து விடப் பட்டுள் ளது. இணையதொடர்பு கிடைக்கவில்லை. போன்களும் வேலை செய்யவில்லை. இதனால், நடிகை மஞ்சுவாரியர், சணல் குமார் சசிதரன் உட்பட இந்தப் படக்குழுவைச் சேர்ந்த சுமார் 30 பேர் சிக்கிக் கொண்டனர். அவர்களுடன் சுற்றுலாவுக்கு அங்கு வந்த ஏராளமானோரும் சிக்கியுள்ளனர். 

(சணல்குமார் சசிதரன்)

இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில், உதவியாக கிடைத்த சேட்டிலைட் ஃபோன் மூலம், நடிகை மஞ்சுவாரியர், தனது தம்பி மதுவாரியரிடம் பேசினார். அப்போது தாங்கள் சிக்கியிருப்பதைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து மது வாரியர், மத்திய அமைச்சர் முரளிதரனிடம் உதவி கோரியுள்ளார். அவர், இமாச்சலப்பிரதேச முதல்வருக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப் படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com