ஓய்வு பெறுகிறாரா இசை அமைப்பாளர் மணி சர்மா?

ஓய்வு பெறுகிறாரா இசை அமைப்பாளர் மணி சர்மா?
ஓய்வு பெறுகிறாரா இசை அமைப்பாளர் மணி சர்மா?

இசை அமைப்பாளர் மணி சர்மா, சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

தமிழில், விஜயகாந்தின் நரசிம்மா, விஜய் நடித்த ஷாஜகான், யூத், போக்கிரி, அர்ஜூனின் ஏழுமலை, மலைக்கோட்டை, விஜயகாந்தின் சபரி உட்பட பல படங்களுக்கு இசை அமைத்தவர் மணி சர்மா. இப்போது தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். 
மெலடி மன்னன் என்று அழைக்கப்படும் மணி சர்மாவின், அச்சச்சோ புன்னகை, மெல்லினமே மெல்லினமே, மின்னலை பிடிச்சு, ’போக்கிரி’யில் என் செல்லப்பேரு ஆப்பிள், டோலு டோலுதான் ஆகிய பாடல்கள் இன்றளவும் ரசிக்கப்படுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் இசை அமைத்த தெலுங்கு படங்களின் பாடல்கள் எதுவும் ஹிட் ஆகாததால், அடுத்த வருடத்தில் இசை அமைப்பதில் இருந்து ஓய்வு பெற இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி தெலுங்கு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com