கொலைக் குற்றவாளி வரைந்த ஓவியம்... நெகழ்ச்சியடைந்த கவிஞர் வைரமுத்து!

கொலைக் குற்றவாளி வரைந்த ஓவியம்... நெகழ்ச்சியடைந்த கவிஞர் வைரமுத்து!
கொலைக் குற்றவாளி வரைந்த ஓவியம்... நெகழ்ச்சியடைந்த கவிஞர் வைரமுத்து!

எஸ்பிபி உடன் தான் இருப்பது போன்ற ஓவியத்தை வரைந்த மதுரை மத்திய சிறை கைதி வரைந்துள்ளதாக டிவிட்டரில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

மதுரை மத்திய சிறைக் கைதி ஒருவர் கவிஞர் வைரமுத்துக்கு தான் வரைந்த ஓவியம் ஒன்றை பரிசளித்துள்ளார். அந்த ஓவியம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோயம்புத்தூரை சேர்ந்த கொலை குற்றவாளி பாதமுத்து என்பவர் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.

இவர் சிறையில் இருந்தபடி பல்வேறு புத்தகங்கள் மற்றும் ஓவியங்களை தொடர்ந்து வரைந்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் வைரமுத்து இணைந்திருப்பது போன்ற ஓவியம் ஒன்றை வரைந்து அதை மதுரை மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் பழனி அனுமதியுடன் வைரமுத்துக்கு அனுப்பியுள்ளார் கைதி பாதமுத்து.

மதுரை மத்திய சிறைக் கைதி பாதமுத்து வரைந்த ஒவியத்தை வைரமுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் ஒவியம் குறித்து, எஸ்பிபியும், நானும்... மதுரை மத்திய சிறைக்கைதி பாதமுத்துவின் கைவண்ணம் கண்டேன், கண்ணீர் கொண்டேன். சிறை செய்ய முடியுமோ சித்திரத்தை? நன்றி என பதிவிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com