’ஆதாரம் இருக்கு; குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய முடியாது’ - ஹேம்நாத்தின் மனு தள்ளுபடி

’ஆதாரம் இருக்கு; குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய முடியாது’ - ஹேம்நாத்தின் மனு தள்ளுபடி
’ஆதாரம் இருக்கு; குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்ய முடியாது’ - ஹேம்நாத்தின் மனு தள்ளுபடி

சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி அவரது கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ரா மரணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஹேம்நாத் தரப்பில் கூறப்பட்டது. மேலும், சித்ராவின் கணவர் என்பதாலேயே கொலை குற்றச்சாட்டை சுமத்தக்கூடாது என்றும் வாதிட்டப்பது. எனினும் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் உள்ளதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என்று கூறிய நீதிபதி, விசாரணையை எதிர்கொள்ள உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com