விஷால் நடித்த மார்க் ஆண்டனி பட வெளியீட்டுக்குத் தடை!

லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ’மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ’மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. உயர்நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாததால், செப்டம்பர் 12-ல் நடிகர் விஷால் நேரில் ஆஜராகவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, லைக்காவுக்கு விஷால் தரவேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தற்போது வரை ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தாததால் உயர்நீதிமன்றத்தில் லைக்கா முறையிட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com