திருமணம் முடித்தவுடன் அடுத்தடுத்தப் படங்களில் பிஸியான சினேகன்

திருமணம் முடித்தவுடன் அடுத்தடுத்தப் படங்களில் பிஸியான சினேகன்
திருமணம் முடித்தவுடன் அடுத்தடுத்தப் படங்களில் பிஸியான சினேகன்

திருமணம் முடித்தவுடன் அடுத்தடுத்து, தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார் பாடலாசிரியர் சினேகன்.

தமிழ்த் திரையுலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வரும் சினேகன் 700-க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். பாடலாசிரியராக மட்டுமன்றி நடிகர், அரசியல்வாதி எனப் பணிபுரிந்து வருகிறார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இளைஞர் அணி செயலாளராகவும் இருக்கிறார். சினேகன் - நடிகை கன்னிகா ரவி திருமணம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிலையில், திருமணம் முடித்த மறுநாளே நந்த பெரியசாமி இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றவர், இன்று இயக்குநர் ஹரி இயக்கிவரும் ’அருண் விஜய் 31’படத்தில் தனது மனைவி கன்னிகாவுடன் தூத்துக்குடியில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இதனை சினேகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் "ஆனந்தம் விளையாடும் வீடு" என்ற படத்தில் நடித்ததும், அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் திருப்பம் தரும்என்பது உண்மைதானோ” என்று உற்சாகமுடன் பதிவிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com