சினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “படப்பிடிப்பை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. பாதுகாப்பான சூழலுக்கு தேவையான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அனைத்து திரைப்பட அலகுகளும் மீண்டும் தனது படப்பிடிப்பை தொடங்கும் என்று நம்புகிறோம். மீண்டும் படப்பிடிப்பை தொடங்குவதற்கான தேதியை தமிழக அரசு எப்போது அறிவிக்கும் என எதிர்பார்த்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்