’தெலுங்கு சினிமாவின் அஜித்’ பவன் கல்யாணை சந்தித்து மரக்கன்றுகளை அளித்த வில்லன் நடிகர்

’தெலுங்கு சினிமாவின் அஜித்’ பவன் கல்யாணை சந்தித்து மரக்கன்றுகளை அளித்த வில்லன் நடிகர்
’தெலுங்கு சினிமாவின் அஜித்’ பவன் கல்யாணை சந்தித்து மரக்கன்றுகளை அளித்த வில்லன் நடிகர்

தமிழில் நான் ஈ, பாகுபலி, முடிஞ்சா இவன புடி போன்ற படங்களில் நடித்த கிச்சா சுதீப், தெலுங்கின் முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான ’பவர் ஸ்டார்’ பவன் கல்யாணை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து மரக்கன்றுகளை பரிசளித்துள்ளார்.  இன்று தனது ட்விட்டர் பதிவில் “ஒரு எளிய மனிதரை சந்தித்தேன். உங்களுடன் உரையாடியது அற்புதமான நிகழ்வு என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் கிச்சா சுதீப்.  

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவின் அஜித் என்றழைக்கப்படுகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு சிரஞ்சீவி ’பிரஜா ராஜ்யம்’ கட்சியை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டார் பவன் கல்யாண். ஆனால், சிரஞ்சீவி கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தபோது, அதில் மாற்றுக்கருத்து ஏற்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜன சேனா என்ற கட்சியை ஏற்படுத்தி முழுநேர அரசியல்வாதியாய் மாறினார் பவன் கல்யாண்.

ஆனால், அவர் நினைத்தது போல் அரசியல் வெற்றிகரமாக அமையவில்லை. அதனால், மீண்டும் தற்போது நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

அதேபோல, நடிகர் கிச்சா சுதீப் கன்னட நடிகராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருபவர். கடந்த ஆண்டு சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ’சைரா நரசிம்ம ரெட்டி’தான், இவர் கடைசியாக நடித்து தெலுங்கில் வெளியான படம். இந்நிலையில், இன்று கிச்சா சுதீப் திடீரென பவன் கல்யாணை சந்தித்து உரையாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com