கோவாவில் 'ராக்கி பாய்' ! முதல்வர் பிரமோத் சாவந்த்துடன் உற்சாக சந்திப்பு

கோவாவில் 'ராக்கி பாய்' ! முதல்வர் பிரமோத் சாவந்த்துடன் உற்சாக சந்திப்பு
கோவாவில் 'ராக்கி பாய்' ! முதல்வர் பிரமோத் சாவந்த்துடன் உற்சாக சந்திப்பு

கோவா முதல்வர் பிரமோத் சாந்த்தை நடிகர் யஷ் தனது குடும்பத்தினருடன் சந்தித்துப் பேசினார்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி வெளியான ‘கேஜிஎஃப் 2’ மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுக்க ரூ.1000 கோடியைக் கடந்தும் தென்னிந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் ரூ.100 கோடி ரூபாய்க்குமேலும் ராக்கி பாயின் ராஜாங்கம் வசூலைக் குவித்து வருகிறது. இந்தியளவில் அதிக வசூலை குவித்த நான்காவது படம் என்ற கெத்தையும் ‘கேஜிஎஃப் 2’ பெற்றுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ’கேஜிஎஃப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், ’கேஜிஎஃப் 2’ உலகளவில் எதிர்பார்பார்க்கப்படும் படமாக முக்கியத்துவத்தைப் பெற்றது. அதன்படியே, ரசிகர்களை ஏமாற்றாமல் ’கேஜிஎஃப் 2’ படத்தினை உருவாக்கியிருந்தார் இயக்குநர் பிரஷாந்த் நீல். அதற்கு, ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வசூலே சாட்சி. தற்போது, ‘கேஜிஎஃப் 3’ மூன்றாம் பாகத்திற்கும் வெறித்தனமான வெய்ட்டிங்கில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

‘கேஜிஎஃப் 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றி கொடுத்த உற்சாகத்தில் தற்போது யஷ் தனது மனைவி ராதிகா பண்டிட்டுடன் கோவா சென்றுள்ளார். ராதிகாவின் பூர்வீகம் கோவா என்பது குறிப்பிடத்தக்கது. அங்குதான், யஷ் - ராதிகா நிச்சயதார்த்தமும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்றது. தங்களின் ஃபேவரிட் ப்ளேஸான கோவாவுக்கு தற்போது விசிட் செய்துள்ளவர்கள் முதல்வர் பிரமோத் சாவந்த்தை சந்தித்து உரையாடியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை கோவா முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com