தற்கொலைதான் தீர்வா?: வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கேரள நடிகை பினராயிக்கு கடிதம்

தற்கொலைதான் தீர்வா?: வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கேரள நடிகை பினராயிக்கு கடிதம்
தற்கொலைதான் தீர்வா?: வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட கேரள நடிகை பினராயிக்கு கடிதம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தாம் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்றுதான் எம்எல்ஏ ஜார்ஜ் விரும்புகிறாரா என பாதிக்கப்பட்ட பிரபல கேரள நடிகை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மலையாள திரையுலகப் பெண்களுக்கான முகநூல் பக்கத்தில் இந்த கடிதத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தம் மீது பூஞ்சார் சட்டமன்ற உறுப்பினர் ஜார்ஜ் தொடர்ந்து அவதூறு பேச்சுகளை பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மறுநாளே நடிக்க வந்தவர் என்று விமர்சித்துள்ளதை குறிப்பிட்டுள்ள நடிகை, ஒருவாரகாலம் தனிமையில் அடைந்து கிடந்தபோது, சக நடிகர் நடிகையரே மீட்டு வந்ததாகக் கூறியுள்ளார். தமக்கு ‌ஆதரவாக பேசும் பெண்கள் அமைப்பினரையும் தரக்குறைவாக எம்எல்ஏ ஜார்ஜ் பேசுவதாகவும், பாதிக்கப்பட்ட தாம் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் அவர் விரும்புகிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நடிகர் திலீப்பை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாய் சரோஜம் கேரள அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com