என் சின்ன வயது சபதம் நிறைவேறியது: கீர்த்தி சுரேஷ்

என் சின்ன வயது சபதம் நிறைவேறியது: கீர்த்தி சுரேஷ்
என் சின்ன வயது சபதம் நிறைவேறியது: கீர்த்தி சுரேஷ்

எனது சின்ன வயது சபதம் இப்போது நிறைவேறியுள்ளது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். 

சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள திரைப்படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இதில் நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், “தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் பிராமண பெண் வேடத்தில் நடிக்கிறேன். படத்தில் என்னுடைய கதாபாத்திரத்துக்கு பெயரே கிடையாது. நான் ஹுமர் கலந்த சஸ்பன்ஸ் வேடத்தில் நடிக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் சிவன் கதை சொல்லும் போதே எனக்கு கதையும் என்னுடைய கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. 

பள்ளி பருவத்திலேயே நான் சூர்யாவின் ரசிகை. என்னுடைய அம்மா சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமாருடன் மூன்று படத்தில் நடித்துள்ளார். நான் ஸ்கூல் படிக்கும் போது சிவகுமாரின் மகன் சூர்யாவுடன் ஒருநாள் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறியிருந்தேன். அது இன்று நிஜமாகியுள்ளதில் எனக்கு மகிழ்ச்சி. சூர்யா மிகவும் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் அவரிடம் நான் சந்தேகம் கேட்கும் போது, எனக்கு சொல்லிகொடுத்து உதவுவார்.

நடிகர் செந்திலுடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம். அவர் டெடி பியர் போல கியூட் ஆனா மனிதர். அவரோடு நடித்தது எனக்கு மறக்க முடியாத நல்ல அனுபவம். ரம்யா கிருஷ்ணன் என் அம்மாவின் தோழி. எனக்கு அவங்களை சின்ன வயதிலிருந்தே தெரியும். பாகுபலி வெளியான நேரத்தில் அவங்களோடு நடித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் எனக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்துதான் வசனத்தை கூறினார். அதை நாங்கள் அங்கே டெவெலப் செய்து நடிப்போம். அப்படி நடிக்கும் போதுதான் அது சிறப்பாக இருக்கும். படத்தில் அனிருத் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. 3 பாடல்கள் தற்போது சிங்கிளாக வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது சந்தோஷமாகவுள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com