`கே.ஜி.எஃப் 3 முதற்கட்ட பணிகளை தொடங்கியாச்சு’- வெளியான அறிவிப்பு!

`கே.ஜி.எஃப் 3 முதற்கட்ட பணிகளை தொடங்கியாச்சு’- வெளியான அறிவிப்பு!
`கே.ஜி.எஃப் 3 முதற்கட்ட பணிகளை தொடங்கியாச்சு’- வெளியான அறிவிப்பு!

கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகம் பெரும் வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, அந்தப் படத்தின் மூன்றாம் பாகத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. கே.ஜி.எஃப் படத்தின் 3-ம் பாகத்துக்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகள் தொடங்கிவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் நீலின் இயக்கத்தில் நடிகர்கள் யஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரின் நடிப்பில் கே.ஜி.எஃப்-2 திரைப்படம் 4 நாள்களுக்கு முன் இந்தியா முழுவதும் பான் இந்தியா திரைப்படங்களாக தியேட்டர்களில் வெளியானது. வெளியாகி 4 நாட்களே ஆகியுள்ள போதிலும்கூட, படம் பாக்ஸ் ஆபிஸில் அதற்குள் மிகப்பெரிய கலெக்‌ஷனை செய்துள்ளது. பல்வேறு ரெக்கார்களையும் பிரேக் செய்திருக்கிறது கே.ஜி.எஃப் 2 திரைப்படம். 4 நாட்களிலேயே கே.ஜி.எஃப். 2 ரூ.500 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

`ராக்கி பாய்’-ஆக கோபம், தாய்ப்பாசம், ஆக்‌ஷன் என கலந்துகட்டி நடித்திருக்கும் நடிகர் யஷ்ஷூக்கு, இந்தத் திரைப்படம் இந்திய அளவில் அவரது மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. இந்தப்படத்தின் முதற்பாகமும் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வரவேற்பையும், வசூலையும் வாரிக்குவித்திருப்பது, மூன்றாம் பாகம் எடுக்க தயாரிப்பாளருக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கே.ஜி.எஃப் 2 படத்தின் இறுதிக்காட்சியிலேயே மூன்றாம் பாகம் குறித்து அப்டேட் வெளிவந்திருந்த நிலையில், அதை தற்போது தயாரிப்பாளர் உறுதிசெய்திருக்கிறார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">That satisfied official weekend after a long long time. <a href="https://twitter.com/hashtag/KGF2?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#KGF2</a> ❤️</p>&mdash; Karthik Gowda (@Karthik1423) <a href="https://twitter.com/Karthik1423/status/1515743976271540227?ref_src=twsrc%5Etfw">April 17, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

கன்னட செய்தி நிறுவனமொன்றுக்கு இதுதொடர்பாக பேட்டி அளித்த தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா (கே.ஜி.எஃப்.-ன் இரு பாகங்களுக்கும் இவர்தான் தயாரிப்பாளர்), தங்களது குழு கே.ஜி.எஃப் 3-க்கான முதற்கட்ட வேலைகளை தொடங்கிவிட்டதாக்வும் விரைவில் அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்றும் தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்.

இந்த மாத தொடக்கத்தில் கே.ஜி.எஃப். 2 ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின்போது பேசிய படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல், `கே.ஜி.எஃப்-ன் அடுத்த பாகம் வெளியாக இன்னும் குறைந்தது 8 வருடங்களாவது எங்களுக்கு இருக்கிறது’ என் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் மூன்றாவது பாகம் எப்போது திரைக்கு வருமென்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com