ஜோதிகாவுடன் முதன்முறையாக நடிக்கிறார் கார்த்தி?

ஜோதிகாவுடன் முதன்முறையாக நடிக்கிறார் கார்த்தி?
ஜோதிகாவுடன் முதன்முறையாக நடிக்கிறார் கார்த்தி?

‘பாபநாசம்’ இயக்குநர் ஜித்து ஷோசப் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருக்கும் திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவும் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் ‘த்ரிஷியம்’ என்ற த்ரில்லர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜித்து ஷோசப். மோகன்லால், மீனா ஆகியோர் நடித்து வெளிவந்த இத்திரைப்படம் மெகா ஹிட் ஆனது. மலையாளத்தில் மட்டுமன்றி பல மொழிகளிலும் அந்தத் திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் இது திரைப்படம் வெளியானது.

தற்போது இயக்குநர் ஜித்து ஷோசப், பெயரிப்படாத திரைப்படத்தை நடிகர் கார்த்தியை வைத்து இயக்க உள்ளார். தற்போது படப்பிடிப்புக்கு முன்னதான வேலைகளில் இயக்குநர் ஈடுபட்டுள்ளார். இந்தத் திரைப்படத்தில் தற்போது நடிகை ஜோதிகா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது அண்ணன் மனைவியான ஜோதிகாவுடன் இதுவரை கார்த்தி நடித்ததில்லை. இந்தத் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தன் அண்ணியான ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். 

பெயரிடப்படாத இந்தத் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோதிகா ஜோடி இல்லை என்றும், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தின் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் கார்த்தி தற்போது மாநகரம் திரைப்பட இயக்குநர் கனகராஜின் கைதி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ரெமோ இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com