\
சாத்தான்குளம் சம்பவம்: ஜெயராஜ் குடும்பத்தினரிடம் ரஜினி பேசியதாக கராத்தே தியாகராஜன் தகவல்

சாத்தான்குளம் சம்பவம்: ஜெயராஜ் குடும்பத்தினரிடம் ரஜினி பேசியதாக கராத்தே தியாகராஜன் தகவல்

சாத்தான்குளம் சம்பவம்: ஜெயராஜ் குடும்பத்தினரிடம் ரஜினி பேசியதாக கராத்தே தியாகராஜன் தகவல்
Published on

சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்தினரை தொடர்புகொண்டு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தs சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் தங்களது கடுமையான கண்டனங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், ஜெயராஜ் குடும்பத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்ததாக கராத்தே தியாகராஜன்  அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com