பாலியல் புகாரில் சிக்கிய திரைப்பட தயாரிப்பாளருக்கு, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கன்னட திரையுலகில் தயாரிப்பாளராக இருப்பவர் விரேஷ். இவர் புதிய திரைப்படத்துக்காக நடிகை தேர்வின் போது இளம்பெண் ஒருவரிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டு அந்த பெண் தப்பித்துச் சென்று, தனது உறவினர்களை அழைத்து வந்ததாகத் தெரிகிறது. அந்த பெண் அளித்த புகாரின் பேரில் தயாரிப்பாளர் விரேஷை போலீசார் கைது செய்தனர். போலீசார் கைது செய்யும் முன்பு, அந்த பெண்ணின் உறவினர்கள் விரேஷூக்கு தர்ம அடி கொடுத்தனர்.