“திரையுலக மாஃபியா எனது ட்விட்டரை எந்நேரமும் முடக்கலாம்” - கங்கனா ரனாவத்

“திரையுலக மாஃபியா எனது ட்விட்டரை எந்நேரமும் முடக்கலாம்” - கங்கனா ரனாவத்
“திரையுலக மாஃபியா எனது ட்விட்டரை எந்நேரமும் முடக்கலாம்” - கங்கனா ரனாவத்

பாலிவுட் திரையுலகை கட்டுப்படுத்தும் திரைத்துறை கும்பல் தனது ட்விட்டர் கணக்கை எந்நேரமும் முடக்கலாம் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உயிரிழந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அவரது மரணத்திற்கு பின்னர் பெரும் சதி இருப்பதாக பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் எனவும், பாலிவுட்டில் பெரும் ரவுடிக்கும்பல் இருப்பதாகவும் நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டி வருகிறார்.

இந்நிலையில் பாலிவுட் திரையுலக மாஃபியா கும்பல் தனது ட்விட்டர் கணக்கை எந்நேரமும் முடக்கலாம் என குற்றம்சாட்டியுள்ளார். தனக்கு குறிப்பிட்ட நேரமே இருப்பதாகவும், அதற்குள் அந்தக் கும்பல் குறித்த தகவல்களை அம்பலப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது கங்கனா ரனாவத் எழுப்பி வரும் குற்றச்சாட்டுகள் பாலிவுட் திரை வட்டாரத்தில் மேலும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com