நாடகத்தில் நடித்தது தான் சிறந்த இயக்குநர்கள் தனக்கு திரைப்படத்தில் வாய்ப்பளிக்க காரணம் என நடிகர் கமல்ஹசான் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகத்தை பார்த்த பிறகு பேசி அவர், சிறு வயதில் நாடகங்களில் நடித்தது குறித்து பல்வேறு நினைவலைகளையும் பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின் நிறைவாக ஒய்.ஜி.மகேந்திரனின் நாடகத்தில் நடித்தவர்களுக்கு கமல் பரிசுகளை வழங்கினார். நாடகத்தின் மூலமாக தான் நடிப்பை கற்றுக்கொண்டதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.