நான் சினிமாவுக்கு வந்ததில் முன்னாள் முதலமைச்சர் காமராஜருக்கு வருத்தம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
வார இதழ் ஒன்றுக்கு கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில், ’என் அப்பாவுக்கு காமராஜரை ரொம்ப பிடிக்கும். நான் சினிமாவுக்கு வந்ததில் அவருக்கு ரொம்ப வருத்தம். ‘நீ படிச்சு பெரிய ஆளா, கலெக்டர் ஆகணும்னு உங்கப்பாட்ட சொல்லிட்டே இருக்கேன். கூத்தாடி கூத்தாடி...’னு திட்டியிருக்கார். நான் படிக்காம விட்டதில் எங்க அப்பாவுக்கு கூட அந்தளவு வருத்தம் கிடையாது. நான் பாட்டுக்குத் திடீர்னு கிளம்பி ராமாவரம் தோட்டத்துக்கு எம்.ஜி.ஆரை பார்க்கப் போயிடுவேன். திடீர்னு வந்தா எப்படின்னு அவர் செகரட்டரியெல்லாம் கோவிச்சுப்பாங்க. ஆனா எம்.ஜி.ஆர் அனுமதிப்பார்’ என்று கூறியுள்ளார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன், ‘யாரைப் பார்த்து முதுகெலும்பு இல்லாதவர்னு சொல்கிறீங்க? எப்படி சமமா உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கார்னு பாருங்க. அவரைப் போல நீங்க பேசியிருக்கீங்களா?’ன்னு ஜெயலலிதாவோட நான் பேசும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்காங்க. இதில் இருந்து எனக்கு முதுகுத்தண்டு இருக்கா, இல்லையா என்பதைத் தாண்டி, எப்படி இருந்த உறவு கெட்டுப் போச்சு என்பதைதான் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார் கமல்.