\
“எதிரியை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது” - கமல்

“எதிரியை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது” - கமல்

“எதிரியை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது” - கமல்
Published on

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மொத்தம் 16 பேர் போட்டியாளராக பங்கேற்றனர். முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வவ்போது தமிழக அரசியல் குறித்து மறைமுகமாக பேசினார். அவர் பேசிய சில நேரங்களில் விவாதங்களானது. முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அவர் மிகவும் சூடான அரசியல் பேட்டிகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால், கட்சி தொடங்கிவிட்ட நிலையில் பிக்பாஸ்2 நிகழ்ச்சியிலும் அவர் ஏதாவது பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் கமல் நச்சென்று சில விஷயங்களை பேசியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய கமல், ‘எந்த விளையாட்டிலும் எதிரி யார் என்பதை முடிவு செய்ய வேண்டும். இன்னும் சில நாட்களில் நானும் அதை முடிவு செய்ய வேண்டி உள்ளது’ என்று கூறினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com