இந்தி ரீமேக்கில் கார்த்தியின் ‘கைதி’ - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.

இந்தி ரீமேக்கில் கார்த்தியின் ‘கைதி’ - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.
இந்தி ரீமேக்கில் கார்த்தியின் ‘கைதி’ - தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.

கடந்த தீபாவளியையொட்டி கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் இந்தி ரீமேக் உறுதியானது.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 25’ஆம் தேதி ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டவர்கள் நடித்த கைதி திரைப்படம் வெளியானது. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அப்படத்தை இயக்கியிருந்தார். பிகில் படத்தோடு போட்டியிட்டதால் படம் வெளியாவதற்கு முன்பே சமூகவலைதளங்களில் சிலர் கைதி திரைப்படத்தினை கிண்டல் செய்தனர்.

ஆனால், அனைத்து கேலி கிண்டல்களையும் ஓரம் கட்டியது கைதி. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை அடைந்த அப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் சிலர் போட்டியிட்டனர். பிறகு கைதி திரைப்படம் தெலுங்கு மற்றும் மளையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது.

கன்னடத்தில் அப்படத்தினை ரீமேக் செய்ய அப்போதே கடுமையான போட்டி நடந்தது. தற்போது கைதி திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனமே ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பது என முடிவாகியுள்ளது. இதுதொடர்பாக ட்ரீம் வாரியர் பிக்சர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிவிப்பை, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

விரைவில் தமிழ்க் கைதி இந்தி கைதியாக ரிலீஸ் ஆவார் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com