துல்கர், ராணா தயாரிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ”காந்தா”!

'லைஃப் ஆஃப் பை' திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர், ராணா நடித்து அவர்களது தயாரிப்பில் ”காந்தா” என்ற பான் இந்தியா திரைப்படம் வெளியாக உள்ளது.

”பாகுபலி” திரைப்படத்தில் கதாநாயகன் பிரபாஸ்க்கு நிகராக தனது நடிப்பின் மூலமாக ரசிகர்களை பெற்றவர்  ராணா டகுபதி. இவர் தற்போது துல்கர் சல்மானுடன் ஒரு  புதிய திரைப்படத்தில் இணைய உள்ளார். அத்திரைப்படத்துக்கு 'காந்தா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற 'லைஃப் ஆஃப் பை' திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர் செல்வமணி செல்வராஜ். இவர் ”காந்தா” என்ற பான் இந்தியா திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தை, படத்தின் நாயகன் துல்கர்  சல்மானும்  'பாகுபலி'  திரைப்படத்தில்  எதிர்நாயகனாக நடித்து புகழ்பெற்ற ராணா டகுபதியும் இணைந்து தயாரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com