‘காலா’ படத்திற்காக கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றது வுண்டர்பார்

‘காலா’ படத்திற்காக கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றது வுண்டர்பார்
‘காலா’ படத்திற்காக கர்நாடக உயர்நீதிமன்றம் சென்றது வுண்டர்பார்

‘காலா’ படத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என வுண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம், ‘காலா’. உலகம் முழுவதும் வரும் 7-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. காவிரி பிரச்னையில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதாகக் கூறி, கன்னட அமைப்புகள் ‘காலா’ படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கூறின. இதற்கு கர்நாடக தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்து, தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியும் தலையிட முடியாது என்று கூறிவிட்டார்.

இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள ‘காலா’ பாடத்தின் தயாரிப்பு நிறுவனம் வுண்டர்பார், படம் திரையிடப்படுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளது. அத்துடன் படம் திரையிடப்படுவதை தடுத்து பாதுகாப்பளிக்க அரசிற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com