ரஜினியின் ‘காலா’ டப்பிங் தொடங்கியது

ரஜினியின் ‘காலா’ டப்பிங் தொடங்கியது
ரஜினியின் ‘காலா’ டப்பிங் தொடங்கியது

ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து வரும் இவ்வேளையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நானா படேகர், சமுத்திரக்கனி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலா படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. சென்னையில் உள்ள ‘நாக்’ ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இந்த சூழ்நிலையில், தனது அரசியல் நிலைப்பாடு என்னவென்பது குறித்து ரஜினி டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com