பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பி இருக்கிறார் ஈஸ்வரி ராவ்.
பா. இரஞ்சித் இயக்கும் திரைப்படம் ‘காலா’. அந்தப் படத்தின் ட்ரெய்லரில் ‘சண்ட தானே போடுவாரு போடுவாரு.. இன்னும் எத்தனை நாளைக்குனு பாக்கலாம்’ என வசனத்தின் மூலம் வகையாக ரசிகர்கள் மனதில் அசைக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தியவர் ஈஸ்வரி ராவ். இவரை ஏற்கெனவே தனிம் சினிமா அறியும். ஆனால் அதிகம் அறியாது. ‘கவிதை பாடும் அலைகள்’ மூலம் அறிமுகமானவர். அடுத்து விஜய்யின் ‘நாளைய தீர்ப்பு’. மீண்டும் பாலு மகேந்திராவின் ‘ராமன் அப்துல்லா’ படத்தில். ‘சுள்ளான்’ தனுஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடித்தார். இப்போது ‘காலா’.
இவர் தனது ரஜினி பட அனுபவம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில், “வேற யாருக்காவது பண்ண வேண்டிய போன் கால் நமக்குப் பண்ணிட்டாங்களோனு எனக்கு ஒரு குழப்பம். சினிமாவுக்கு நான் பிரேக் விட்டு 10 வருஷத்துக்கு மேல ஆச்சு. ரஞ்சித் முதல்ல ஃபிசிக்கலா நீங்க எப்படி இருக்கணும்னு, பார்க்கணும்னு சொன்னார். அவர் வந்து பார்த்துவிட்டு கொஞ்சம் வெயிட் போடணும்னு சொன்னார். வீட்ல சொன்னேன். நடிக்க சொன்னாங்க. அடுத்து ரஜினி படத்துல நடிக்கப் போறேன்னு என் கணவர்கிட்ட சொன்னேன். அவர் நிச்சயம் அம்மா கேரக்டர்தான் இருக்கும்னு சொன்னார். அப்புறம் நான் தான் ரஜினிக்கு ஜோடினு சொன்னேன். அவங்க நம்பல” என குறிப்பிட்டு இருக்கிறார் ஈஸ்வரி.