\
k bhagyaraj passed away updates
கே.பாக்யராஜ்புதிய தலைமுறை

#KBhagyaraj| நாடாளுமன்றத்தில் எதிரொலித்த ‘தாவணிக் கனவுகள்’!

நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் காலமான செய்தி, தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தன்னுடைய இயக்கம் குறித்துப் பேசிய பாக்யராஜ்

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவிடம் பணியாற்றியது குறித்து பிபிசியிடம் பேசியிருந்த இயக்குநர் கே.பாக்யராஜ், ''எங்க டைரக்டர் எப்பவுமே சீரியஸ் டைப். எல்லா விஷயத்தையும் அழுத்தமாக சீரியஸ் ஆக சொல்வார். நான் எப்படிப்பட்ட காட்சியாக இருந்தாலும் அதை எளிமையாகவும், காமெடி, சென்டிமென்ட் கலந்தும் கொடுக்கணும்னு நினைப்பேன்'' என்று கூறியிருந்தார்.

இயக்குநர் சீனு ராமசாமி இரங்கல்

நேற்றிரவு 10.30 மணிக்கு பாக்யராஜ் சார் எனக்கு கால் பண்ணாங்க. சிரித்து கொண்டே சந்தோஷமாக பேசினார்; இந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது; அவருடைய மிகப்பெரிய ரசிகன் நான்; என்னுடைய தந்தை இறந்தது போல் உள்ளது; அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்.

பாக்யராஜை நடிகராக அறிமுகப்படுத்திய பாரதிராஜா

நடிகர், இயக்குநர், வசன கர்த்தா எனப் பல பரிமாணங்களில் திரைத் துறைக்கு தனது பங்களிப்பைச் செய்த பாக்யராஜை, நடிகராக அறிமுகம் செய்ததும் பாரதிராஜாதான். தன்னுடைய பல்வேறு படங்களில் சிறுசிறு வேடங்கள் கொடுத்து பாக்யராஜை நடிகராக்கிய பாரதிராஜா, தன்னுடைய 'புதிய வார்ப்புகள்' படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

பெசன்ட் நகரில் தகனம்

பாக்யராஜுக்கு அரசு மரியாதை

தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரு.கே. பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும். அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.கே.பாக்யராஜ் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் திரு. கே.பாக்யராஜ் அவர்களின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.

- தமிழக முதல்வர் விஜய்

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த ‘தாவணிக் கனவுகள்’!

இயக்குநர் பாக்யராஜ் இயக்கிய முக்கியமான 10 படங்கள்

1. சுவரில்லாத சித்திரங்கள்

இவர் இயக்கிய முதல் படமான சுவரில்லாத சித்திரங்கள் மெகா ஹிட்டானது. முதல் படத்திலேயே தனது திறமையால் அனைவரையும் ஈர்த்தார். சுதாகர், பாக்யராஜ், சுமதி, கவுண்டமணி நடித்த இந்த படம் காதலை மட்டுமல்ல, அந்த கால இளைஞர்களின் வாழ்க்கை, கனவு, வேலையில்லா திண்டாட்டம், பசி கொடுமை என பல விஷயங்களை வெளிப்படுத்தியிருந்தது. இந்தப் படத்தில் பாக்யராஜின் நடிப்பும், கவுண்டமணியின் நகைச்சுவையும் இன்றும் பேசப்படுகின்றன. கங்கை அமரன் இசையமைப்பில் உருவான காதல் வைபோகமே பாடல் இன்றும் கொண்டாடப்படுகிறது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

2. முந்தானை முடிச்சு

கிராமப்புற பின்னணியில் அமைந்த நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தீபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில்தான் ஊர்வசியை அறிமுகம் செய்திருந்தார். கைக்குழந்தையுடன் இருக்கும் பள்ளி ஆசிரியரை, ஊர்வசி எப்படி திருமணம் செய்கிறார், அதற்கு என்னென்ன பொய்கள் சொல்கிறார் என்ற ரீதியில் கதை நகரும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இளையராஜா, பாக்யராஜ் கூட்டணியில் உருவான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது. இந்த படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.

3. அந்த 7 நாட்கள்

பாக்யராஜ் மற்றும் அம்பிகா நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் மலையாளியான பாலக்காட்டு மாதவனுக்கும், தமிழ் பெண் வசந்திக்கும் காதல். ஆனால், சூழ்நிலை காரணமாக ராஜேஷை மணக்கிறார் வசந்தி. விஷயம் அறிந்த கணவர் அவரின் காதலை சேர்த்து வைக்க நினைக்க, என்ன நடந்தது என்பதுதான் கதை.பாக்யராஜ் நடிப்பு, அம்பிகாவுடனான காதல் என எல்லாமே படத்தில் சிறப்பாக இருக்கும். இந்த பட சாயலில், இந்த கதையை தழுவி தமிழில் மட்டுமல்ல, இந்திய அளவில் பல படங்கள் வந்தது.

4. இன்று போய் நாளை வா

பாக்யராஜ், ராதிகா நடிப்பில் காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிபூர்வமான காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தில் 3 நண்பர்கள், எதிர் வீட்டு பெண் என சாதாரண பின்னணியை , மிக இயல்பாக காட்சிபடுத்தியிருப்பார் பாக்யராஜ். அந்த பெண்ணை கவர நண்பர்கள் செய்யும் விஷயங்கள், அந்த கிராமத்து பின்னணி, பெண்ணின் வெகுளித்தனம் ஆகியவை மக்களை வெகுவாக ஈர்த்தது. ராதிகாவின் நடிப்பும், நகைச்சுவை காட்சிகளும் இன்றும் பேசப்படுகின்றன. இந்த படமும் பிற்காலத்தில் பல கதைகளாக உருவானது.

5. ஒரு கை ஓசை

பாக்யராஜ் இயக்கிய 2வது படம். வாய்பேச முடியாத இளைஞர் ஒருவர், மருத்துவரிடம் காதலை சொல்லும் கதை. அந்த காலத்தில் டீக்கடைகளில் இருந்த சாதிய ஏற்றத்தாழ்வுகள் என பல விஷயங்களை சொன்ன படம். அப்படி பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன் நடித்திருந்தார். பாக்யராஜ் படங்களுக்கே உரிய கிளைமாக்ஸ் இதிலும் இடம்பிடித்து, பலரை கவர்ந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் இந்தப்ப்டம் உருவாகியிருந்தது.

6.சின்ன வீடு

பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்து வெளிவந்த தமிழ்த் திரைப்படம். வணிகரீதியில் வெற்றி பெற்ற திரைப்படம்.இந்தப் படம் விருப்பம் இல்லாத திருமணம், உடல்பருமனான மனைவி, மற்றொரு பெண்ணுடன் உறவு என பல விஷயங்களை சொல்லும். பாக்யராஜ் மனைவியாக கல்பனா நடித்து இருந்தார். பாக்யராஜ் அம்மாவாக வரும் கோவை சரளா நடிப்பு, கல்பனாவின் வெகுளித்தனம் படத்துக்கு பலமாக இருந்தது.

7. மெளனகீதங்கள்

பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கங்கை அமரன் இசையமைத்த திரைப்படமாகும்.ஒரே அலுவலகத்தில் வேலை, எதிரெதிர்வீடு, ஆனால், பிரிந்திருக்கும் கணவன்-மனைவி என்ற வித்தியாசமான கருவில் உருவாகியிருந்தது இந்தப்படம். பாக்யராஜ் நடிப்பு மட்டுமல்ல, சரிதாவின் கோபம், வைராக்கியமும், இவருக்கும் இடையேயான சண்டையும் படத்தின் முக்கிய அம்சங்கள். கங்கை அமரன் இசையில் 'மூக்குத்திப் பூமேலே', 'மாசமோ மார்கழி மாசம்', 'டாடி டாடி' பாடல்கள் பிரபலமடைந்தன. பாக்யராஜுக்கு மகனாக வரும் சிறுவனின் நடிப்பும் பேசப்பட்டது.

8. சுந்தரகாண்டம்

பாக்யராஜ் எழுதி, இயக்கிய இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ் , பானுப்ரியா, சிந்துஜா, மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்திய இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் வரும் ஐந்தாவது காண்டத்தின் பெயரைத் தழுவியே இப்படத்தின் பெயர் வைக்கப்பட்டது. பின்னர், இந்தப் படம் இந்தி மொழியில் மறு ஆக்கம் செய்யப்பட்டு அந்தாஜ் என்ற பெயருடன் வெளிவந்தது. தான் படித்த பள்ளியிலேயே தமிழ் ஆசிரியராக வரும் பாக்யராஜை, பள்ளி மாணவி சிந்துஜா காதலிக்கிறார். அது தவறு என சொல்லி, பானுப்பிரியாவை மணக்கிறார் பாக்யராஜ். மீண்டும் அவர்கள் வாழ்வில் சிந்துஜா வர என்ன நடக்கிறது என்பது தான் கதை. படத்தில் நகைச்சுவையும் கதைக்கு பலம்.

9. டார்லிங் டார்லிங் டார்லிங்

பாக்கியராஜ் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் சிறுவயதில் தொழிலதிபர் மகள் பூர்ணிமாவை காதலிப்பார் பாக்யராஜ்.அவர் படித்து விட்டு பெரியவர் ஆகி வர, பாக்யராஜ் என்ன செய்கிறார், அவர் நிலை என்ன ஆனது என்பது கதை. படத்தின் இறுதிக்காட்சி யாரும் எதிர் பாராதது. அதே படத்தில் இடம் பெற்ற அழகிய விழிகளில் பாடல், பூர்ணிமாவின் நடனம், யதார்த்தமான வசனங்கள் படத்தை வெற்றி பெற வைத்தன.

10. தூறல் நின்னு போச்சு

பாக்கியராஜ் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் பாக்யராஜ் , சுலோக்சனா, நம்பியார் நடிப்பில் உருவான கிராமத்து பின்னணியிலான படம். நம்பியாரை வேறு மாதிரி காண்பித்து இருப்பார் பாக்யராஜ். அவரின் நடிப்பும், என் சோக கதை கேளு பாடலுக்கு ஆடும் அழகும் சிறப்பாக அமைந்தன. இந்தப் படத்தின் தங்கச்சங்கிலி, ஏரிக்கரை பூங்காற்றே பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. செந்தாமரையின் வில்லத்தனம் எல்லோராலும் பேசப்பட்டது.

’பாக்யா’ மூலம் பத்திரிகையாளராக மிளிர்ந்த பாக்யராஜ்

சிரித்தபடியே இருந்தவர் சிரித்தபடியே மரணமடைந்திருக்கிறார் - சுஹாசினி

பல்துறை வித்தகர் பாக்யராஜ்

பாக்யராஜ் இயக்கிய திரைப்படங்கள்

1979 - சுவர் இல்லாத சித்திரங்கள்

1980 - ஒரு கை ஓசை

1981 - மௌன கீதங்கள்

1981 - இன்று போய் நாளை வா

1981 - விடியும் வரை காத்திரு

1981 - அந்த 7 நாட்கள்

1982 - தூறல் நின்னு போச்சு

1982 - பொய் சாட்சி

1982 -டார்லிங், டார்லிங், டார்லிங்

1982 - முந்தானை முடிச்சு

1984 - தாவணிக் கனவுகள்

1985 - சின்ன வீடு

1987 - எங்க சின்ன ராசா

1989 - ஆராரோ ஆரிரரோ

1990 - அவசர போலீஸ் 100

1991 - பவுனு பவுனுதான்

1991 - சுந்தர காண்டம்

1992 - ராசுக்குட்டி

1994 - வீட்ல விசேஷங்க

1995 - ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி

1998 - வேட்டிய மடிச்சுக்கட்டு

2003 - சொக்கத்தங்கம்

2006 - பாரிஜாதம்

2010 - சித்து +2

பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் காலமான பாக்யராஜ்!

இயக்குநர் பாரதிராஜாவின், ‘16 வயதினிலே’ படத்தில் உதவி இயக்குநராக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய பாக்யராஜ், ’சுவர் இல்லாத சித்திரங்கள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள பாக்யராஜ், 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமாகி 17 நாட்களில் பாக்யராஜ் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்யராஜை, அவர் எப்போதும் பிரியமுடன் ‘பாகி’ என்றே அழைப்பார்.

மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் இரங்கல்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்புதிய தலைமுறை

தமிழ் திரைப்பட உலகில் தனது தனித்துவமான படைப்பாற்றலாலும், குடும்பப் பாசம் மற்றும் சமூக மதிப்புகளை வலியுறுத்திய திரைப்படங்களாலும், தலைமுறைகள் பலரின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர் கே. பாக்யராஜ். அண்மையில் திரையுலகில் தனது 50 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்து, திரையுலகினராலும் ரசிகர்களாலும் சிறப்பாகப் பாராட்டப்பட்ட நிலையில், அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவு செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி...!

ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர் இரங்கல்

”குருவின் இறப்பின்போது சிஷயனால் பேசவே முடியவில்லை” - விக்ரமன்

”என்ன சொல்வதென்றே தெரியவில்லை” - ஊர்வசி

இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இரங்கல்

கே.பாக்யராஜ் மறைவு

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com