‘காற்றின் மொழி’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜோதிகா.. பரிசு கொடுத்து அசத்தல்..!

‘காற்றின் மொழி’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜோதிகா.. பரிசு கொடுத்து அசத்தல்..!
‘காற்றின் மொழி’ படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜோதிகா.. பரிசு கொடுத்து அசத்தல்..!

‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் தான் சார்ந்த படப்பிடிப்புகளை நிறைவு செய்துள்ளார் நடிகை ஜோதிகா.

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘மொழி’. இந்தப் படத்துக்கு பிறகு ஜோதிகாவுடன் ராதாமோகன் மீண்டும் இணையும் படத்துக்கு ‘காற்றின் மொழி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் கடந்த ஜூன் 4-ஆம் தேதி தொடங்கியது. வெவ்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டன. மற்ற கலைஞர்களை வைத்து இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற தும்ஹரி சுலு (Tumhari Sulu) படத்தின் ரீமேக் தான் காற்றின் மொழி. குடும்பத் தலைவியாக இருக்கும் பெண் ஒருவர் தன்னை வெளியில் அடையாளப் படுத்திக் கொள்ள எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்ற கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் இது எனத் தெரிகிறது.

கடந்த 25-ஆம் தேதியே ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது கடைசி நாள் படப்பிடிப்பில் ஜோதிகா படக்குழுழுவில் உள்ளவர்களுக்கு சேலை மற்றும் வேட்டியை பரிசாக அளித்து அசத்தியுள்ளார். இதுமட்டுமில்லாமல், படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்களுக்கும் சிறப்பு பரிசினையும் அளித்துள்ளார் ஜோதிகா. தனது கேரியரில் சிறந்த படக்குழுவாக இது இருந்தது என்றும் ஜோதிகா பெருமையுடன் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

பாஃப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பாக ஜி.தனஞ்செயன் இப்படத்தை தயாரிக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் கே.எல்.பிரவீண், ஒளிப்பதிவாளர் மகேஷ் என பலரின் முயற்சியில் இப்படம் உருவாகியுள்ளது. அக்டோபர் 18-ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com