’கேஜிஎஃப்’ இயக்குநருடன் இணையும் ஜூனியர் என்டிஆர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

’கேஜிஎஃப்’ இயக்குநருடன் இணையும் ஜூனியர் என்டிஆர்: அதிகாரபூர்வ அறிவிப்பு
’கேஜிஎஃப்’ இயக்குநருடன் இணையும் ஜூனியர் என்டிஆர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

’கேஜிஎஃப்’ இயக்குநர்  பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதியப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது.

 தெலுங்கின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் இன்று தனது 38 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். தற்போது ராஜமெளலியின் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் அக்டோபர் 13 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளையொட்டி 31 வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்பை கூட்டியிருகிறது. காரணம் இப்படத்தை இயக்கவிருப்பவர் உலகளவில் வசூல் சாதனை படத்த ‘கேஜிஎஃப்’ படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல்தான்.

தற்போது, ‘கேஜிஎஃப் 2’ இயக்கி முடித்துள்ள பிரஷாந்த் நீல், பிரபாஸை வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். அதற்குள், இன்று ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளையொட்டி இருவரும் இணையும் படத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார். இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com