மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் வீடு வரும் 26-ம் தேதி ஏலத்துக்கு வருகிறது.
தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்திருப்பவர் ஸ்ரீவித்யா. 80-களில் டாப் ஹீரோயினாக இருந்த இவர், பல்வேறு கேரக்டர்களில் நடித்துள்ளார். சென்னை அபிராமபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த இவர், 2006 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்த புரத்தில் மரணமடைந்தார்.
இவரின் இறப்புக்கு பிறகு, இவரது அபிராமபுர வீட்டை அவரின் சகோதரர் நிர்வகித்து வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, இந்த வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. ரூ. 45,2800 வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக, அவரது வீட்டை வரும் 26-ம் தேதி வருமான வரித்துறை ஏலத்தில் விடுகிறது. இதன் ஆரம்பக்கட்ட ஏல தொகை, ரூ.1.14 கோடி. இதுகுறித்த நோட்டிஸ் அவரின் இல்லத்தின் முன்பு ஒட்டப்பட்டுள்ளது.