”இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் என்னை தைரியமூட்டினர்”: ‘மாநாடு’ தயாரிப்பாளர் உருக்கம்

”இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் என்னை தைரியமூட்டினர்”: ‘மாநாடு’ தயாரிப்பாளர் உருக்கம்
”இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் என்னை தைரியமூட்டினர்”: ‘மாநாடு’ தயாரிப்பாளர் உருக்கம்

’மாநாடு’ படத்திற்காக தைரியமூட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள் என்று தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

சிம்பு நடிப்பில் உருவான 'மாநாடு' திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒத்திவைப்பதாக நேற்று மாலை அறிவித்தார். பைனான்சியரிடம் பெறப்பட்ட கடனை திரும்ப செலுத்தாததே அதற்கு காரணம் என சொல்லப்பட்டது.

இந்நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி 11 மணி மணியளவில் படம் வெளியாகும் என அறிவித்தனர். ஆனாலும், அதிகாலை வரை தயாரிப்பாளர் - பைனான்சியர் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. அதனால் திரையரங்குகளுக்கு KDM கிடைக்கப்பெறாததால் 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 8 மணியில் இருந்து திரையிடப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், 'மாநாடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

படம் வெளியான நெகிழ்ச்சியில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “நானே எதிர்பார்க்காத தடங்கல் மாநாடு படத்தின் இந்த தாமதம். நேற்று இரவு முழுக்க நிறைய நலம் விரும்பிகள் அழைத்தும் குறுந்தகவலிலும் தைரியமூட்டினர். நிறைய பேரின் அழைப்பை எடுக்க இயலவில்லை. அரசியல் பிரமுகர்கள் , சினிமா பிரபலங்கள், பத்திரிகை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com